நீர்கொழும்பு
குரணை பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (12-8-2017)
விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற
துப்பாக்கிச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும்
28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.ஜி.என்.கே.
ரன்கொத்கே நேற்று (18) உத்தரவிட்டார்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் சந்தேக நபர்களான தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த வெலமெத கெதர அருணசாந்த,
ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த அளுத்வத்தை கங்காணம்லாகே
தரிந்து மதூச ஆகியோரே விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிடப்பட்டவர்களாவர்.
சந்தேக
நபர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை
(13) இரவு நீர்கொழும்பு பதில் நீதவான் கருணா ஜீவ கமகே குணதாச முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட
போது இன்று 18 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்
செய்யப்பட்டபோதே நீதவான் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய எனைய சந்தேக நபர்கள் இருவரும் துப்பாக்கிச்சூட்டின் காரணமாக
காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரங்க
ஹொட்டிகே வஜிர குமார, பத்தரண முதியான்சலாகே
சமித் குமார ஜயதுங்க ஆகியோரே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களாவர்.
சந்தேக
நபரகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment