Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, September 5, 2017

போதைப் பொருளை உடம்பினுள் மறைத்து கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜைக்கு விளக்கமறியல்

உடம்பினுள் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்து நாட்டுக்குள் கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜையை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான்  ஆர்.ஜி.என்.கே. ரன்கோன்கே நேற்று திங்கட்கிழமை (4) உத்தரவிட்டார்.
பாகிஸ்தான் லாஹுரைச் சேர்ந்த 37 வயதுடைய மொஹமத் அஸ்லம் என்பவரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.
சந்தேக நபர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தடுப்புக் காவல் உத்தரவு பெற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரின் உடம்பினுள் மறைத்து வைத்திருந்த  367 கிராம் ஹெரோயின் அடங்கிய 37 உருண்டைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


No comments:

Post a Comment