Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, October 11, 2017

நீர்கொழும்பு வெலிஹே ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா   பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் இன்று புதன் கிழமை (11-10-2017) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் கலை நிகழ்ச்சிகள்  இடம்பெற்றதுடன் ஆசிரியர்களை இரு குழுக்களாகப் பிரித்து நடத்தப்பட்ட பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி, இசைக் கதிரை நிகழ்ச்சி உட்பட பல்வேறு விநோத விளையாட்டு  நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றன.

படசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் 'புனித சேவையில் மனித சேவகர்' என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். ஆசிரியை எம். நேசமலர் நன்றி உரை நிகழத்தினார்.  மாணவர் தலைவி செல்வி சத்யகலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்வின் இறுதியில் மாணவர்களினால் ஆசிரயர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.































No comments:

Post a Comment