தேசிய
உணவு உற்பத்தியை மேம்படுத்தும் உணவு உற்பத்தி வாரம் நேற்று ஜனாதிபதியினால் ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
இன்று
சனிக்கிழமை (7) நாட்டில் உள்ள அரசாங்க பாடசாலைகளில் உணவு உற்பத்தி வாரத்தையிட்டு நிகழ்வுகள்
இடம் பெற்றன. நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி , வெலிஹேன ரோமன் கத்தோலிக்க
தமிழ் வித்தியாலயம் என்பவற்றில் பாடசாலை அதிபர்கள் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
தேசியக்
கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின, உணவு உற்பத்தி வாரம் தொடர்பான உரை மற்றும்
இயற்கை உரம் தயாரித்தல் அதன் முக்கியத்துவம்
தொடர்பான உரை என்பன இடம்பெற்றன. பின்னர்
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் பல்வேறு காய் கறி
மரங்கள் நடப்பட்டன.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான், செல்வா
No comments:
Post a Comment