நீர்கொழும்பு
நகரில் வாழும் தமிழ் மக்கள் இன்று (18) தீபாவளி பண்டிகையை அமைதியான முறையில் கொண்டாடுகின்றனர்.
நகரில்
உள்ள கோயில்களில் இன்று காலை விசேட பூஜைகள் இடம்பெற்றன. இதில் பெரும் எண்ணிக்கையானோர்
பங்குபற்றினர்.
நீர்கொழும்பு
கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சிவஸ்ரீ குகேஸ்வர குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் இடம்பெற்றன. கடற்கரைத்
தெரு
ஸ்ரீ சிங்கம்மா காளியம்பாள் தேவஸ்தானத்தில் பரமேஸ்வர குருக்கள் தலைமையில் விசேட
பூஜைகள் இடம்பெற்றன.
இரு கோயில்களிலும் இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment