இன்று நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில்
நீர்கொழும்பு மற்றும் கட்டானை பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் வாக்களித்தனர்.
இராஜாங்க
அமைச்சர் சுதர்ஷனி பெர்னாந்து புள்ளே வெலிஹேன ரோமன் கத்தோலிக்க சிங்கள வித்தியாலயத்தில் தனது தாயார் மற்றும் மகளுடன்
சென்று வாக்களித்தார்.
நீர்கொழும்பு
தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரும் மேயர் வேட்பாளருமான ரொயிஸ்
பெர்னாந்து நீர்கொழும்பு சாந்த ஜோசப் வித்தியாலயத்திலும், பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா தளுவகொட்டுவ சாந்த
ஹானா வித்தியாலயத்திலும்
வாக்குகளை அளித்தனர்.
படங்கள்
- இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாந்து புள்ளே, நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின்
ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரும் மேயர் வேட்பாளருமான ரொயிஸ் பெர்னாந்து, பிரதி
அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா ஆகியோர் வாக்குகளை அளிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு
செல்வதையும் பொதுமக்கள் வாக்களிக்க செல்வதையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment