Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, March 1, 2018

கர்தினால் மெல்கம் ரஞ்சித்துடன் நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு


நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள்; கட்சியின் நீர்கொழும்பு பிரதான அமைப்பாளரும் மேயர் வேட்பாளருமான ரொயிஸ் பெர்னாந்து தலைமையில் நேற்று புதன்கிழமை  (28) கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கொழும்பு இல்லத்தில் சந்தித்தனர்.
இதன்போது நீர்கொழும்பில் நிரந்தரமாக போதைப் பொருளை  ஒழிப்பது தொடர்பாக விசேட வேலைத்தி;ட்டங்கள் மேற்கொள்ள வேண்டியமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் தாங்கள் அதற்காக பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக மாநகர சபை உறுப்பினர்கள் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் தெரிவித்தனர்.

அத்துடன் நீர்கொழும்பில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாகவும் அங்கு கர்தினாலிடம் எடுத்துக் கூறப்பட்டதாக மாநகர சபை உறுப்பினர் கிஹான் பெர்னாந்து தெரிவித்தார்.








No comments:

Post a Comment