நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின்
மாணவர் தலைவர்களுக்கான இலட்சினை (சின்னம்)
அணிவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை
(19-3-2018) பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிரேஸ்ட மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட செல்வன்
ஆர். பிரபாகரன், செல்வி எஸ். நதீசா
ஆகியோருக்கு பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் இலட்சினை அணிவிப்பதையும் , ஆசிரியர்களான
திருமதி எம். நேசமலர், அருட் சகோதரி குளொடில்டா, திருமதி பத்மாவதி ஆகியோர் புதிதாக தெரிவு
செய்யப்புட்ட மாணவர் தலைவர்களுக்கு இலட்சினை அணிவிப்பதையும், மாணவர் தலைவர்கள் சத்தியப்
பிரமாணம் செய்வதையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment