நீர்கொழும்பு
கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரபணஹ பிரதேசத்தில்
இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை
(27) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
கட்டானை
குலரத்ன மாவத்தையைச் சேர்ந்த ஸ்டன்ட் சந்துல
என்ற 20 வயது இளைஞரே சம்பவத்தில் பலியானவராவார்.
இரண்டு மோட்டார்
சைக்கிள்களில் மரணமடைந்த இளைஞரும் காயமடைந்த இளைஞரும் வேகமாக வந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில்
கண்டவர்கள் தெரிவித்தனர்.
விபத்தை
அடுத்து மோட்டார் சைக்கிள் அப்பம் விற்கும் கடையில் மோதியுள்ளதுடன் மரணமடைந்தவரின்
தலை மின்சார கம்பத்தில் மோதியுள்ளது.
சம்பவம்
இடம்பெற்ற இடத்தில் அமைந்துள்ள அப்பம் விற்கும் கடையில் இருந்த பெண் ஒருவரும் மோட்டார்
சைக்கிளை செலுத்தி வந்த மேலும் ஒருவரும் காயமடைந்த
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து
தொடர்பாக கட்hனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
No comments:
Post a Comment