Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, May 5, 2018

நீர்கொழும்பில் மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டவர் மீது வாள் வெட்டு தாக்குதல்


நீர்கொழும்பு  மாநகர சபை தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தலாதூவ வட்டாரத்தில் போட்டியிட்ட நபர் ஒருவர் மீது வாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
வர்ணகுலசூரிய ரமேஸ் நிலங்க பெர்னாந்து (43 வயது)  என்பவர் மீதே நேற்று வெள்ளிக்கிழமை (4) பிற்பகல் 1 மணியளவில் அவரது வீட்டில் வைத்து  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  மூன்று பிள்ளைகளின் தந்தையான  இவர் தனது வீட்டுக்கு முன்னால் வெல்டிங் நிலையம் ஒன்றை நடத்தி வருபவராவார்.
 மோட்டார்  தமது சைக்கிள் வெல்டிங் செய்ய வேண்டும் என்று கூறி வெல்டிங் நிலையத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்களில் ஒருவரே வாள் வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளார்.

தலையில் காயங்களுக்கு உள்ள ரமேஸ் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் தலையில் 12 தையல் போடப்பட்டுள்ளதாக அவரின்  மனைவி தெரிவித்தார்
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசம் அணிந்து வந்த நபரே  தன்மீது தாக்குதல் நடத்தியதாகவும் , இருவர் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும்  அவர்களில் ஒருவர் தனது மனைவியிடம் தண்ணீர் கேட்டதாகவும் மனைவி  தண்ணீர் கொண்டு வருவதற்காக வீட்டிற்குள் சென்றதன் பின்னர் நித்திரையில் இருந்த தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்  ரமேஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் நீர்கொழும்பு களப்பு  மீனவ அதிகார சபையின் தலைவராவார்.
சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment