Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, June 18, 2018

33 வருட கால ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் திருமதி எம்.ஏ.சில்வாவுக்கு சேவை நலன் பாராட்டு விழா


  ஆசிரியர் சேவையில் 33 வருட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற  நீர்கொழும்பு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி மேரி அனஸ்டீன் சில்வாவை  கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (18-6-2018) நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் நடைப்பெற்றது.
பாடசாலையில் இடம்பெற்ற  கௌரவிப்பு நிகழ்வுக்கு முன்னதாக வெலிஹேன கைத்தான் தேவாலயத்தில் ஓய்விற்கான நன்றித் திருப்பலி நடைபெற்றது. அருட் தந்தை எல். றோயிஸ்டன் ஜெயராஜ் பெர்னாந்துபுள்ளே நன்றித் திருப்பலியை நடத்தினார்.

 இந்த சேவை நலன் பாராட்டு விழா நிகழ்வில் நீர்கொழும்பு  கல்விக் கோட்டத்தின் முன்னாள் கல்விப் பணிப்பாளர்  ஜி.ஏ.ஏ. மைக்கல், ஆசிரிய ஆலோசகர்கள், வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய ஆசிரியர்கள்  மற்றும் அருட் சகோதரிகள் உட்பட பலர் பங்குபற்றினர்.
படவிளக்கம் -
வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய  அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் ஓய்வுபெறும் ஆசிரியைக்கு   பாடசாலையின் சார்பில் நினைவுப் பரிசு வழங்குவதையும், ஆசிரிய ஆலோசகர்கள்  சார்பிலும், வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் சார்பிலும் அன்பளிப்பு வழங்கப்படுவதையும், நிகழ்வில் முன்னாள் கல்விப் பணிப்பாளர் மைக்கல்,  ஓய்வு பெறும் ஆசிரியை திருமதி எம்.ஏ.சில்வா, அதிபர் ஷாஜஹான் ஆகியோர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.








 பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான்












ஆசிரிய ஆலோசகர் திருமதி மேரி அனஸ்டீன் சில்வா

முன்னாள் கல்விப் பணிப்பாளர்  ஜி.ஏ.ஏ. மைக்கல்

No comments:

Post a Comment