Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, June 16, 2018

நீர்கொழும்பு மற்றும் பஸ்யாலையில் நோன்புப் பெருநாள் தொழுகை (PHOTOS)


நீர்கொழும்பு நகரில் வாழும் முஸ்லிம்கள் இன்று  சனிக்கிழமை நோன்புப் பெருநாளை விமர்சையாக  கொண்டாடினர். பள்ளிவாசல்களில் விசேட பெருநாள் குத்பா மற்றும் தொழுகைகள் இடம்பெற்றன.
பெரியமுல்லையில் அமைந்துள்ள  அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில்  மௌலவி தாஹிர் அஹ்மத் தலைமையில் பெருநாள் குத்பா மற்றும் தொழுகை இடம் பெற்றது. தொழுகையின் பின்னர் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றினர்.

இதேவேளை, பஸ்யாலையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில்  அஸ்மத் மௌலவி  எம்.ஏ. அஸ்மத் தலைமையில் பெருநாள் குத்பா மற்றும் தொழுகை இடம் பெற்றது.

பெரியமுல்லை  அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில்  
























பஸ்யாலையில்






No comments:

Post a Comment