நீர்கொழும்பு
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை
(19) காலை கல்லூரி அதிபர் என். புவணேஸ்வர ராஜா தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார வுட்லர் பிரதம அதிதியாகவும், மாபொல அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் திருமதி கே. சுபாஷினி சிறப்பதியாகவும்
கலந்து சிறப்பித்தனர்.
கல்லூரி
அதிபர் புவணேஸ்வர ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார வுட்லர்
சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் அதிதிகள் மாணவர் தலைவர்களுக்கு சின்னம் அணிவித்தனர்.
செல்வன்
எஸ். யதுர்சன், செல்வி வி. ரோசானி பற்றீசியா ஆகியோர் சிரேஸ்ட மாணவர் தலைவர்களாக சின்னம் சூட்டப்பட்டனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குத்து விளக்கேற்றுதல்,
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உரையாற்றுதல்
கல்லூரி அதிபரால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நினைவுச் சின்னம்
வழங்கி கௌரவிக்கப்படுதல்
No comments:
Post a Comment