Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, February 24, 2015

விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வைரவிழாவையிட்டு 'நெய்தல்' நூல் வெளியீட்டு அரங்கு

   நீர்கொழும்பு   விஜயரத்தினம்  இந்து  மத்திய  கல்லூரி பழையமாணவர்  மன்றம்  ஏற்பாடு  செய்துள்ள  நெய்தல்  நூல் வெளியீட்டு   அரங்கு  எதிர்வரும்  28-02-2015   சனிக்கிழமை   மாலை 3 மணிக்கு    கல்லூரி    மண்டபத்தில்    நடைபெறவுள்ளது.
பழையமாணவர் மன்றத்தின்    தலைவரும்  நீர்கொழும்பு  மாநகர சபை உறுப்பினருமான  சதிஸ் மோகன்    தலைமையில்  நடைபெறவுள்ள  இந்த   அரங்கில்  திருமதி   திலகமணி   தில்லைநாதன்  ( முன்னாள் ஆசிரியர்)  . நா.  புவனேஸ்வரராஜா. (தற்போதைய அதிபர்)     திரு. நடராஜா ,      ந. கணேசலிங்கம் (முன்னாள் அதிபர்கள்)  ஆகியோர் 
வாழ்த்துரைகளை   நிகழ்த்தவுள்ளனர்.
              திரு. வீ. தனபாலசிங்கம்    ( பிரதம ஆசிரியர் - தினக்குரல்)    திருமதி அன்னலட்சுமி    இராஜதுரை (  ஆசிரியர் -  கலைக்கேசரி )  மல்லிகை ஜீவா    ஆகியோரின்    சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளன.
                  கல்லூரியின்   முன்னாள்    மாணவர்    கவிஞர்     நீர்கொழும்பு ந. தருமலிங்கம் வாழ்த்துப்பா    வழங்கவுள்ளார்.
 நெய்தல்    நூல்   நயப்புரைகளை   படைப்பாளி,  ஊடகவியலாளர்  திரு.  கருணாகரன் ,  கொழும்பு    இந்து   சமய   கலாசார  அலுவல்கள் திணைக்கள   அதிகாரி  திருமதி  தேவகுமாரி  ஹரன் ,  மூத்த படைப்பாளி    தெளிவத்தை  ஜோசப் ,    கவிஞர்    மேமன்கவி,   மூத்த எழுத்தாளர்     ஜனாப் மு. பஷீர்    ஆகியோர்   நிகழ்த்தவுள்ளனர்.
  நெய்தல்    நூலை  தொகுத்திருக்கும்    கல்லூரியின்    முதல்    மாணவரும் படைப்பிலக்கியவாதியுமான   திரு. லெ. முருகபூபதி    ஏற்புரையையும் ,   பழைய    மாணவர்   மன்றத்தின் செயலாளர்     ஆர். அரவிந்தன்     நன்றியுரையையும்    நிகழ்த்தவுள்ளனர்.



 விஜயரத்தினம்   இந்து   மத்திய  கல்லூரியில்    பயிலும்    ஆறு மாணவர்களுக்கான    புலமைப்பரிசில்    வழங்கும்   நிகழ்வும்    கல்லூரி    ஆவணக்காட்சியகம்  திறந்துவைக்கப்படும் நிகழ்வும் இந்த    அரங்கில்  இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment