Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, October 6, 2017

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் அகில அலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்ற ஹரிச்சந்திர தேசிய பாடசாலை மாணவன் தினுக கிசன் குமார

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்; 198 புள்ளிகளைப் பெற்று அகில அலங்கை ரீதியில் நீர்கொழும்பு  ஹரிச்சந்திர தேசிய பாடசாலை மாணவன்  டப்ளியு. கே. தினுக கிசன் குமார (10 வயது) என்ற முதலாமிடம் பெற்றுள்ளார்.
நீர்கொழும்பு  கட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த வசநத குமார், எச்.பி. கிரிசாந்தி சிரோமளா ஆகியோரின் புதல்வாரன  ந்த மாணவன் படிப்பில் மட்டுமன்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் திறமை காட்டி வருபவராவார்.

இதுதொடர்பாக மாணவரின் இல்லத்திற்கு சென்று நாங்கள் வினவியபோது பின்வருமாறு தெரிவித்தார்,



 நான் தினமும் பாடங்களை படித்தேன், நண்பர்களுடன் விளையாடினேன். தேசிய ரீதியில் முதல் பத்து இடங்களுக்குள் வருவேன் என்று நம்பினேன். தற்போது முதலாமிடத்திற்கு வந்துள்ளேன். இது எனக்கு பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது பெற்றோர்கள், பாடசாலை அதிபர் , வகுப்பாசிரியர் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.  ஆர்வத்துடன் கற்று தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றியடையலாம் என்றார்.


No comments:

Post a Comment