நீர்கொழும்பு
கல்வி வலயத்தின் கட்டானை கோட்டப் பிரிவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் தமிழ் - சிங்கள
புத்தாண்டு விழா இன்று வியாழக்கிழமை (5) கட்டானை வித்தியாலோக்க மகா வித்தியாலயத்தில்
நடைபெற்றது.
கட்டானை
கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி எல்.பி.எஸ்.
சில்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்டானை
கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்கள், பாடசாலை அதிபர்கள்,
கல்வி அதிகாரிகள், சர்வ மதத் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர்
பங்குபற்றினர்.
சர்வ
மதத் தலைவர்களின் ஆசியுடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் சித்திரைப் புத்தாண்டுடன் தொடர்புடைய நிகழ்வுகள், கலாசார நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுப்
போட்டிகள் என்பன இடம்பெற்றன.
நிகழ்வில்
எடுக்கப்பட்ட படங்களை காணலாம்.
Photos - M.Z. Shajahan
No comments:
Post a Comment