'டெங்குவை
ஒழித்து வாழ்க்கையை வெற்றிக் கொள்வோம்' என்ற தொனிப் பொருளில் நிர்கொழும்பு நகரில் இன்று
சனிக்கிழமை (27) டெங்கு தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு
இடம்பெற்றது.
ஸ்ரீ
விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த
இந்த தெளிவூட்டும் நிகழ்வுக்கு நீர்கொழும்ப
மாநகர சபையின் பொது சுகாதார பிரிவு , இராணுவம், சமுர்தி மற்றும் சிவில் அமைப்புக்கள்
பல ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
இதன்போது
குடாபாடு, கடற்கரைத் தெரு, முன்னக்கரை, பிரதான வீதி, சிறிவர்தன பிரதேசம், கடோல்கலே
ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் 'டெங்குவை ஒழித்து வாழ்க்கையை வெற்றிக் கொள்வோம்' என்ற
தொனிப் பொருளில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், வீடுகள்
, காணிகள் சோதனை செய்யப்பட்டு பொது மக்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment