அரிய வகை மூன்று கடல் ஆமைகளை பிடித்த இரு மீனவர்களை
நீர்கொழும்பு துங்கல்பிட்டி பொலிஸார் இன்று
புதன்கிழமை (25) அதிகாலை கைது செய்துள்ளதுடன் மூன்று ஆமைகளை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் துங்கல்பிட்டி பிரதேசத்தைச்
சேர்ந்தவர்களாவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
முட்டை இடுவதற்காக கரைக்கு வரும் ஆமைகளை சந்தேக நபர்கள் இறைச்சியாக்கி விற்பனை
செய்வதற்காக பிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆமைகளில் இரண்டு பெண் ஆமைகளாகும். ஒரு ஆமை ஆண் ஆமையாகும். ஆமைகளில் ஒன்று காயம் காரணமாக இறந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஆமைகளில் இரண்டு பெண் ஆமைகளாகும். ஒரு ஆமை ஆண் ஆமையாகும். ஆமைகளில் ஒன்று காயம் காரணமாக இறந்துள்ளது.
ஆமைகளை பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வலைகளை பொலிஸார்
கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆமைகள் அரிய வகை ஆமைகளாகும். இவற்றை
பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment