நீர்கொழும்பு
பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வை. ஜி.ஆர். எம். ரிபாத் பிரஜா பொலிஸ் நிலையத்தை
திறந்து வைத்தார்.
திறப்பு
விழா நிகழ்வுக்கு முன்னதாக சர்வ மதத் தலைவர்கள்
ஆசி வழங்கினர்.
நிகழ்வில்
கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.சி. பத்மலால், வெலிஹேன நடமாடும்; பிரஜா
பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரோஹன த சில்வா, பிரதேச பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், பிரதேசவாசிகள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒரு
மாத காலத்திற்கு செயற்படும் இந்த பொலிஸ் நிலையத்தினூடாக பிரதேசத்தில் நிலவும் குற்றச்
செயல்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பிரதேச மக்களுக்கு சேவையாற்றவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment