Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, March 10, 2014

நீர்கொழும்பு கோட்டப் பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் -2014

நீர்கொழும்பு  கல்விக் கோட்டத்தைச் சேர்;ந்த பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று திங்கட்கிழமை (10-3-2014) நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நீர்கொழும்பு  கோட்டக்  கல்விப் பணிப்பாளர் ஜி.ஏ.ஏ. மைக்கல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்கொழும்பு   வலயக் கல்விப்
பணிப்பாளர்  கே.ஏ.சி. பெர்னாந்து பிரதம அதிதியாகவும், வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்  பி.சி.பி. பெர்னாந்து கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.  பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.














ஆண்கள் பிரிவில் மாரிஸ்டெல்லா கல்லூரி 259 புள்ளிகள் பெற்று முதலாமிடத்தையும், பெண்கள் பிரிவில் ஆவே மரியாள் கல்லூரி 183 புள்ளிகள் பெற்று முதலாமிடத்தையும் பெற்றுக் கொண்டன. ஆண்கள் பிரிவில் லொயலா கல்லூரி 107 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தையும் பெண்கள்; பிரிவில் நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரி 177 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தையும்  பெற்றுக் கொண்டன.

 நிகழ்வின் இறுதியில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வின் போது, நீர்கொழும்பு வலய உடற் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் காமினி பெர்னாந்து, ஆசிரிய ஆலோசகர் மஹ்பூப் மரிக்கார், உடற் கல்வி ஆசிரிய ஆலோசகர் பிரிமால் பெர்னாந்து மற்றும் மாரிஸ்டெல்லா கல்லூரி, ஆவே மரியாள் கல்லூரி, நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரி  ஆகியவற்றின் அதிபர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிண்ணங்களை வழங்கினர்.









No comments:

Post a Comment