புனித
நோன்புப் பெருநாள் தொழுகை இன்று
புதன்கிழமை (6-7-2016) காலை
நீர்கொழும்பு நகரில் பள்ளிவாசல்களில் இடம்பெற்றது. பெரும் எண்ணிக்கையான மக்கள்
தொழுகையில் கலந்து கொண்டனர்.
நீர்கொழும்பு> பெரியமுல்லை ‘மஸ்ஜித் பஸ்ல்’ பள்ளிவாசலில் மௌலவி
அஸ்மத் அஹ்மத் தலைமையில் பெருநாள் தொழுகையும்
பெருநாள் விசேட உரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்து தற்காலிகமாக தங்கியிருக்கும்
பாகிஸ்தானிய அஹ்மதி முஸ்லிம்கள்; பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
படங்கள்: மௌலவி அஸ்மத் அஹ்மத் தொழுகை நடத்துவதையும்> பெருநாள்
குத்பா நிகழ்த்துவதையும்> மக்கள் தொழுகையில் ஈடுபடுவதையும், ஒருவருக்கொருவர்
மகிழ்ச்சி தெரிவிப்பதையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment