நீர்கொழும்பு கட்டுவ பிட்டிய பால்தி சந்தியில் நேற்று திங்கட்கிழமை (14) மாலை 7.15 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில்
மோட்டார் சைக்கிள் சேர்விஸ் சென்டர் மற்றும்
உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன்
காரணமாக நிலையத்தில் சேர்விஸ் செய்வதற்காகவும் பழுது பார்பதற்காகவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
மோட்டார் சைக்கிள்கள் , விற்பனைக்காக வைக்கப்படடி;ருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும்
பொருட்கள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.
நீர்கொழும்பு
மாநகர சபையின் தீயணைப்புப் படைப் பிரிவின் நான்கு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து
தீயை அணைத்தன.
நீர்கொழும்பு
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதோடு விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
தீயினால்
ஏற்பட்ட நஸ்டம் இதுவரை கணக்கிடப்படவில்லை.
No comments:
Post a Comment