நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை (12) நீர்கொழும்பு சென் பீற்றர்ஸ்
கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனாரத்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான
லலித் ரோஹன கமகே , அத்துகோரல, எம். ரிபாத் ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார பெட்ரிக் வுட்லர் தலைமையில் அணிவகுப்பு
இடம்பெற்றது.
இதன்போது
நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்
அனுர சேனாரத்ன பொலிஸ் உத்தியோகத்தர்களை தனித்தனியாக மேற்பார்வை செய்ததுடன், பொலிஸ்
வாகனங்களையும் பரிசோதித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு பிராந்நிய பொலிஸ் நிலையங்களின்
பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment