போதைப் பொருள் விற்பனை செய்வோருக்கு ஹெரோயின் போதைப் பொருள் விநியோகிக்கும் சட்ட விரோத
நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை நீர்கொழும்பு பிரதான நீதவான் எதிர்வரும் செப்டம்பர்
மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த அக்கா மற்றும்
தம்பி ஆகியோரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர்.
கட்டுநாயக்கா பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து சந்தேக
நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கொழும்பிலிருந்து பஸ்ஸில் போதைப் பொருளை கொண்டு வரும் போது கட்டுநாயக்க
18 ஆம் கட்டை ரயில் கடைவை அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அக்காவிடமிருந்து
4 கிராம் 35 மில்லி கிராம் ஹெரோயினையும் தம்பியிடமிருந்து
5 கிராம் 25 மில்லி கிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஹீனஹிட்டியான மற்றும் மினுவாங்கொட
பிரதேசங்களில் உள்ள போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்து வந்துள்ளனர். ஆண் சந்தேக
(தம்பி) நபர் ஹீனஹிட்டியான பிரதேசத்தில் வாடகைக்கு அறையொன்றை எடுத்து போதைப் பொருள்
விநியோகித்து வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment