Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, April 25, 2020

நீர்கொழும்பு வைத்தியசாலையின் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மேலதிக பிரிவொன்றை அமைத்துக் கொடுத்த சிவப்பு நட்சத்திர நிவாரண சேவைப் பிரிவினர்


நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மேலதிக பிரிவொன்றை மக்கள் விடுதலை முன்னணியின் சிவப்பு நட்சத்திர நிவாரண சேவைப் பிரிவினர் (ரத்து தருவ சஹன சேவா பலகாய) நிர்மானித்துக் கொடுத்துள்ளனர்.
இதனை கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (24-4-2020) மாலை வைத்தியசாலையில் நடைபெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்தியர் நிஹால் வீரசிங்க விசேட பிரிவை திறந்து வைத்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள்  மேல் மாகாண சபை உறுப்பினரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளருமான மகிந்த ஜயசிங்கவின் மேற்பார்வையில் இந்த விசேட பிரிவு, கடந்த இரண்டு வார காலமாக கட்சி உறுப்பினர்கள் சிலரின் சுய உழைப்புடன் 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த பிரிவு அமைக்கப்பட்டதன் காரணமாக  கொரோனா  தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மேலும் இடவசதி கிடைத்துள்ளதாகவும் இதன் காரணமாக தீவர சிகிச்சைப் பிரிவில்  மேலும்  கட்டில்களை வைக்க முடியும் எனவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.











No comments:

Post a Comment