Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, January 25, 2011

கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு தேசிய விருது


பிரபல கவிஞர் ஏ.இக்பாலிடம் ஷாஜஹான் விருது பெறும்
 காட்சி


  25-1-2011 அன்று கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற புதிய சிறகுகள் லங்கா கலை விழாவில் கவிஞரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கவிஞர் கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு விருது கிடைத்தது.
கலை விழாவையிட்டு திறந்த போட்டியாக நடத்தப்பட்ட பாடல் இயற்றுதல் போட்டியியில் இவர் அகில இலஙகை ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளமையையிட்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது.அத்துடன் இவர் ​எழுதிய ஆய்வு கட்டுரைக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.மனித உரிமை தொடர்பாக போட்டி நிகழ்ச்சிக்காக கலாநெஞ்சன் ஷாஜஹான் ஆய்வு கட்டுரை சமர்பித்திருந்தார்.
 இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு இவர் தேசிய ரீதியில் பெற்றுள்ள 33 ஆவது விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இவர் பாடசாலை மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டங்களிலும் பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

1 comment: