நீர்கொழும்பு சிறைச்சாலையில் உலக எயிட்ஸ் தின நிகழ்வு
உலக எயிட்ஸ் தினத்தையிட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் எயிட்ஸ் தொடர்பாக கைதிகளுக்கு விழிப்புட்டும் நிகழ்வொன்று இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிமுதல் இடம்பெற்றது
.
இதனை நீர்கொழும்பு கைதிகள் நலன்புரி சங்கம் நீர்கொழும்பு சிறைச்சாலை நிருவாகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.நிகழ்வின் ஒரு பகுதியாக கைதிகள் சிலர் எயிட்ஸ் ஒழிப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி சிறைச்சாலையின் வெளிப்பகுதியை சுற்றி ஊர்வலமாக சென்றனர்.
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளும் காவலர்களும் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து எயிட்ஸ் தொடர்பாக வைத்தியர் ஜயந்த சிறிவர்தனவினால் கைதிகளுக்கு விஷேட உரை ஒன்று சிறைச்சாலையில் நிகழ்த்தப்பட்டது.
This comment has been removed by the author.
ReplyDelete