Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, June 22, 2012

பெண்னொருவரின் உள்ளங் கையை துளைத்துக் சென்ற இரும்புக் கம்பி


இரும்புக் கம்பியொன்று  பெண்னொருவரின் உள்ளங்கையை துளைத்துக் கொண்டு சென்ற நிலையில் அப்பெண் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இன்று நண்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சனி சமரசிங்க என்ற பெண்னே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.

குறித்த பெண் தனது வீட்டுக் காணியில் மண்வெட்டியால் குழியொன்றை தோண்டும் போது நிலத்தில் புதைந்திருந்த கட்டிட வேலைக்கு பயன்படுத்தப்படும் கம்பியொன்று அப் பெண்ணின் உள்ளங்கையை துளைத்துக் கொண்டு சென்றுள்ளது.

பின்னர் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித் பெண்ணுக்கு ஆரம்ப சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பான முறையில்  கம்பியை அகற்றவுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.





No comments:

Post a Comment