Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, November 2, 2012

கிறிஸ்மஸ் தீவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 26 பேருக்கு 6 ஆம் திகதி வரை விளக்கமறியல்


சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு இலங்கைக்கு நேரடியாக திருப்பி அனுப்பப்பட்ட 26 பேரை நீர்கொழும்பு மேலதிக நீதவான் டப்ளியூ. கே. துலானி எஸ;. வீரதுங்க இன்று வெள்ளிக்கிழமை 
எதிர்வரும் ஆறாம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

திருகோணமலை ,தெவுந்தர , நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர்.

இவர்கள் மூன்று ரோலர் படகுகளில் திருகோணமலை , பேருவளை , தெவுந்தர ஆகிய பிரதேசங்களிலிருந்து முறையே சாந்த ஜுட், சயூரி, ராஜா என்ற பெயர் கொண்ட ரோலர் படகுகளில் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்களாவர்.

இவர்கள் அனைவரும் நேற்று வியாழக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது குற்றபபுலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment