கவிஞரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலாநெஞ்சன் ஷாஜஹான் அகில இலங்கை கவி சம்மேளனத்தினால் 'காவிய பிரதீப' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(22-12-2013) கொழும்பு மஹவெலி நிலையத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக பேராசிரியர்கள், கவிஞர்கள், கலைஞர்கள்
உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
கலாநெஞ்சன் ஷாஜஹான் இரண்டு கவிதைத் தொகுதிகளையும் இரண்டு இஸ்லாமியப் பாடல் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளதோடு, இலக்கியப் போட்டிகளில் தேசிய ரீதியில் பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். கல்வி முதுமாணி உயர் பட்டப்படிப்பு மாணவரான இவர் சமாதான நீதவானுமாவார். கொழும்பு ஹமீத் அல் ஹசைனி கல்லூரி, மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் சாமஸ்ரீ தேச கீர்;த்தி, கவித்தீபம் ஆகிய பட்டங்கள் வழங்கி; கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment