நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றம்
நடத்தம் மென்பந்து சுற்றுப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிமுதல் (9-3-2014) நீர்கொழும்பு கோட்டை
மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றத்தின்
தலைவரும் மாநகர சபை உறுப்பனருமான சதீஸ் மோகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்,
மேல் மாகாண முன்னாள்
அமைச்சர் நிமல்லான்ஸா பிரதம விருந்தினராகவும்,
கல்லூரி அதிபர் செல்வி. எஸ். நாகராணி,
கல்லூரியின் காப்பாளர்
திருமதி யோகேஸ்வரி ஜெயம் விஜயரத்தினம், முன்னாள் அதிபர் என்.
கணேசலிங்கம், திரு. திருமதி பாரத் குமார்
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
No comments:
Post a Comment