நீர்கொழும்பு நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரி மாணவிகள் ஐவரை நாய் கடித்துள்ளது. இந்த
சம்பவம் இன்;று வியாழக்கிழமை காலை 7.20 மணிக்கும் 7.30 மணிக்கும் இடையில்
பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
தரம் இரண்டு, தரம் மூன்று . தரம் நான்கு ஆகிய
வகுப்புக்களைச் சேர்ந்த மாணவிகளே நாய் கடிக்கு ஆளாகியுள்ளனர். வைத்திய
சிக்கிச்சையின் பின்னர் மாணவிகள் வீடு திரும்பியுள்ளதாக
பாடசாலை ஆசிரியர்கள்
தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து மாணவிகள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு
சிகிகச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் பாடசாலை பூமியில் இருந்த
கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றியுள்ளனர். ஆயினும். மாணவிகளை கடித்த நாய்
பாடசாலையின் பின்பக்கமாக உள்ள வாயில் வழியாக தப்பிச் சென்றுள்ளது.
இதேவேளை பாடசாலை வாயிலிலும் பாடசாலை பிரதேசத்திலும் ஆறுக்கும் மேற்பட்ட கட்டாக்காலி நாய்கள்
சுற்றித் திரிவதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment