Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, August 9, 2014

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய ரயில் பெட்டியிலிருந்து இரும்பு திருடிய ஆறு பேர் கைது

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய ரயில் பெட்டியிலிருந்து இரும்பு திருடிய சந்தேக நபர்களான ஆறு பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் கடந்த வெள்ளிக்கிழமை( 8) உத்தரவிட்டடார்.
நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த அறுவரே விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிடப்டபட்டவர்களாவர்.
சந்தேக நபர்கள் கொச்சிகடை ரயில் நிலையத்தில் நிறதித்தி  வைக்ப்பட்டுள்ள பழைய ரயில் பெட்டியிலிருந்து  கதவு, மிதிபடி (மிதிபலகை)
ஆகியவற்றை  திருடியுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இரும்புகளை திருடி விற்ற பணத்தை சந்தேக நபர்கள் மதுபானம் அருந்துவதற்கு பயன்படுத்தியுளளதாக விசாரணைகளின் போது மேலும் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment