நடைபெறவுள்ள பொதுத்
தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஐக்கிய
தேசியக் கட்சியுடன் இணைந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகின்ற நிலையில்,
மேல் மாகாண
சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
ஷாபி ரஹீம் கம்பஹா மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
2004 ஆம் ஆண்டு
நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில்
முதன் முதலாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 3001 விருப்பு வாக்குகள் பெற்று மாகாண சபை உறுப்பினராகத் இவர் தெரிவு செய்யப்படார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல்மாகாண சபை
தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கம்பஹா மாவட்ட
தலைமை வேட்பாளராக
போட்டியிட்டு 12 ஆயிரத்து 344 விருப்பு வாக்குகள் பெற்று
வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற
பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ்
கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன்
இணைந்து போட்டியிட்ட போது, அந்த தேர்தலில்; கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு; 23 ஆயிரத்து 122 விருப்பு வாக்குகளைப்; ஜனாப் ஷாபி ரஹீம் பெற்றார்;.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல்மாகாண சபை தேர்தலில் கட்சியின் கம்பஹா
மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிட்டு 12 ஆயிரத்து 337 விருப்பு வாக்குளைப் பெற்று மூன்றாவது முறையாகவும் இவர் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.
கம்பஹா மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஒரே முஸ்லிம் வேட்பாளர் இவர்
என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment