Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, September 10, 2015

முச்சக்கர வண்டி - வேன் மோதியதில் ஒருவர் படுகாயம்: நீர்கொழும்பு தளுபத்தையில் சம்பவம்

முச்சக்கர வண்டி மீது எதிர்பக்கமாக வேகமாக வந்த வேன் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில்  நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இரவு (10) 7.45 மணியளவில் நீர்கொழும்பு தளுபத்தை> பல்லன் சேனை வீதியில் இடம்பெற்றது.
இந்த விபத்துச் சம்பவத்தில் தளுபத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சுஜீ என்ற குடும்பஸ்த்தரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.இவர் மோட்டார் சைக்கிள் திருத்துனராக தொழில் புரிபவராவார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது>



 காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி தளுபத்தை> பல்லன் சேனை வீதியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது> அந்த வீதிக்கு வரும் குறுக்கு வீதி ஒன்றிலிருந்து  வேன் வேகமாக வந்து முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
சம்பவத்தை அடுத்து; படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி பிரதேசவாசிகளால் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன் வேனின் முன்பக்கத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 






No comments:

Post a Comment