Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, November 5, 2015

சிறுவர் பாதுகாப்பு வாரத்தையிட்டு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் சித்திரப் போட்டி

   கல்வி அமைச்சு சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்  'மகிழ்வான சிறுவர் உலகம் - பாதுகாப்பான எதிர்காலம்;' எனும் தொனிப்பொருளில்  2-11-2015 துவக்கம் 9-11-2015 வரையான ஒரு வாரத்தை சிறுவர் பாதுகாப்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் இதனையிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு நிகழ்வாக மாணவர்கள் மத்தியில்   'மகிழ்வான சிறுவர் உலகம் - பாதுகாப்பான எதிர்காலம்;' எனும் தொனிப்பொருளில் சித்திரப் போட்டி ஒன்றை நடத்தியது.


மாணவர்களும் ஆசிரியர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சித்திரங்களை பார்வையிடுவதையும் சிறுவர் சித்திரங்களையும் படங்களில் காணலாம்.









No comments:

Post a Comment