நீர்கொழும்பு பிட்டிபனையில் கடந்த சனிக்கிழமை (29) இரவு 8.30 மணியளவில் இடம் பெற்ற
வாகன விபத்தில் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள்கள்
இருவர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.குணதாச நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) உத்தரவிட்டார்.
ஹர்ஸ இந்திரஜித் வடுகே என்பவரே விளக்கமறியலில் வைக்குமாறு
உத்ரவிடப்பட்டவராவார். விபத்து இடம்பெற்ற வேளையில்
சந்தேக நபர் அதிக மதுபோதையில் இருந்துள்ளமை
விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் மரணமடைந்தவர்கள்; ஆணமடுவையைச்
சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான அசோக்க லலித்
யசநாயக்க (39 வயது) , தங்கொட்டுவையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சமிந்த பண்டார
(32 வயது) என்ற பொலிஸ் கான்ஸ்டபிள்களாவர்.
கான்ஸ்டபிள்கள்
இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் 273 ஆம் இலக்க பஸ் பயணிக்கும் நீர்கொழும்பு – ஜா-எல
வீதி வழியாக நீர்கொழும்பு திசையிலிருந்து ஜா-எல திசையை நோக்கிச் சென்றுள்ளது. கைது
செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பயணித்த கார் ஜா-எல திசையிலிருந்து நீர்கொழும்பு திசையை
நோக்கி மீது வேகமாக வந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த
சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
No comments:
Post a Comment