Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, October 30, 2016

நீர்கொழும்பு பிட்டிபனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பலி

நீர்கொழும்பில் இடம் பெற்ற வாகன விபத்தில் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
 இச்சம்பவம் சனிக்கிழமை (29) இரவு 8.30 மணியளவில் பிட்டிபனை பசியவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கான்ஸ்டபிள்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக வந்த கார் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் காரணமாக இரு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.








No comments:

Post a Comment