நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில்
ஆசிரியர் தினவிழா மற்றும் சிறுவர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை (5) பாடசாலை அதிபர் எம். இஸட்.ஷாஜஹான் தலைமையில் பாடசாலை
மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின்
ஆரம்பத்தில் ஆசிரியர்களால் மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களால்
ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்திற்கான வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், சிறுவர்
தினத்தையிட்டு ஆசிரியர்களால் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கலை நிகழ்ச்சிகள் (கவிதை, பாடல், ஆடல், நடிப்பு) இடம் பெற்றன.
இறுதியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டு
நிகழ்வுகள் இடம்பெற்றன.
படம்: பாடசாலை அதிபர் எம்.
இஸட்.ஷாஜஹான் ஆசிரியர் தின கவிதை வாசிப்பதையும், ஆசிரியர்கள் ஆசிரியர் கீதம்
இசைப்பதையும் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் கலை நிகழ்ச்சிகளையும், விளையாட்டு நிகழ்ச்சிகளையும்
மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படுவதையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment