சர்வதேச
ரொட்டரி கழகத்தின் ரொட்டரி நிறுவனத்திற்கு
(Rotary
Foundation) 100 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு
நீர்கொழும்பு ரொட்டரி கழகம் வாகனப் பேரணி மற்றும்
இசை நிகழ்ச்சி என்பவற்றை ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிகழமை
(5) மாலை நீர்கொழும்பு பெரடைஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
நீர்கொழும்பு
ரொட்டரி கழகத்தின் தலைவர் அஜித் வீரசிங்க, செயற்றிட்ட இணைப்பாளர் வினி சிறிவர்தன, மக்கள்
தொடர்பு இணைப்பாளர் சுசந்த லியனகே ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்தனர்.
நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தின் தலைவர் அஜித் வீரசிங்க
அங்கு விளக்கமளிக்கையில் கூறியதாவது,
சர்வதேச
ரொட்டரி கழகத்தின் ரொட்டரி நிறுவனத்திற்கு
(சுழவயசல குழரனெயவழைn) 100 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு
எதிர்வரும் 29 ஆம் திகதி (அக்டோபர் 29) நீர்கொழும்பு ரொட்டரி கழகம் வாகனப் பேரணி மற்றும் இசை நிகழ்ச்சி என்பவற்றை நடத்தவுள்ளது.
நீர்கொழும்பு மாநகர சபை மைதானம் அருகில் ஆரம்பமாகும் வாகனப் பேரணி நீர்கொழும்பு , பமுனுகம,
வத்தளை, ஜா-எல, கந்தானை, திவுலப்பிட்டிய, கட்டானை ஊடாக மீண்டும் நீர்கொழும்பு வந்தடையவுள்ளது.
அன்றைய தினம் மாலையில் 'ஜெட் வின்ங்' ஹோட்டல் கடற்கரைப் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று
நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கையின் பிரபல கலைஞர்கள் பங்குபற்றவுள்ளனர்.
ரொட்டரி
கழகத்தின் மூலமாக இலங்கையில் பல்வேறு மக்கள் நலசேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போலியோ
தடுப்பு மருந்து வழங்கல், மூக்குக் கண்ணாடி வழங்குதல், சுகாதார சேவைகளை மேம்படுத்த
பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை, சுத்தமான குடி நீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளமை, சிறு நீரக பாதிப்புக்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை, பாடசாலை அபிவிருத்திக்கு
உதவியுள்ளமை உட்பட பல்வேறு சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
No comments:
Post a Comment