Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, October 25, 2012

டெங்கு காய்ச்சலினால் பாடசாலை மாணவன் பலி


   
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு பாடசாலை மாணவன் ஒருவன் இன்று முற்பகல் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்


வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியில் ஒன்பதாம் தரத்திவ் பயிலும் கருகுல சூரிய அன்டனி மகேஸ் பெர்னாண்டோ என்ற 14 வயதுடைய மாணவனே மரணமானவனாவார்;. இவர் தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

குறித்த மாணவனுக்கு கடந்த 20 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் கடந்த 23 ஆம் திகதி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று முற்பகல் மரணமானதாக மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment