Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, February 24, 2014

நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு பிரியாவிடை வைபவம்

நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி நீர்கொழும்பு வலய கல்விக் காரியாலயத்திற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுச்; சென்ற  பி.சி.பி. பெர்னாந்துவிற்கான பிரியாவிடை  நிகழ்வு திங்கட்கிழமை (24-2-2014) நீர்கொழும்பு கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.


இதனை நீர்கொழும்பு கோட்ட  கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரி மாணவிகள் கோட்டப் பாடசாலைகளுக்கான கீதத்தை  இசைத்தனர்.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. ஏ.சி. பெர்னாந்து> நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஏ.ஏ. மைக்கல்  நீர்கொழும்பு கோட்ட ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரிய ஆலோசகர்கள்>  பிரியாவிடை பெற்றுச் செல்லும்  கல்வி அதிகாரி;; ஆகியோர் உரையாற்றுவதை படங்களில் காணலாம்.







No comments:

Post a Comment