முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்தமை தொடர்பாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மூவருக்கு
நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி
எம்.எம்.ஏ. கபூர் நேற்று வியாழக்கிழமை (20) மரண தண்டனை விதித்து தீரப்;பளித்தார்
களனி வனவாசலை பிரதேசத்தைச் சேர்ந்த
சிரில் பியரத்ன (49 வயது) சஜீவ பிரியந்த (39வயது) , பி. ஏ.
நந்தபால (59 வயது) ஆகியோரே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.
பிரதிவாதிகள் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
முச்சக்கர வண்டி சாரதியான இந்துனில் கிரிசாந்த
என்பரை கொலை செய்ததாக குற்றம்;
சாட்டப்பட்டு விசாரண
முடிவில் குற்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment