Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, June 26, 2015

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 'போதையில்லாத சுதந்திர தேசம்''

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு    தினத்தையிட்டு  (26)  'போதையில்லாத சுதந்திர தேசம்எனும் தொனிப் பொருளில்  கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த வேலைத்திட்டம் நாடெங்கிலும் உள்ள   அரசாங்கப் பாடசாலைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது  போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்குகள்  தொடர்பாக  வளவாளர்  ஒருவரினால் மாணவர்களுக்கு விசேட உரை நிகழ்த்தப்பட வேண்டும் என  கல்வி அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

நீர்கொழும்பு  வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில்  பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் 'போதையில்லாத சுதந்திர தேசம்நிகழ்வு இடம்பெறுவதையும் , ஆசிரியை  திருமதி நேசமலர் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்குகள்   எனும் தலைப்பில் உரையாற்றுவதையும்,  பாடசாலை அதிபர் உரையாற்றுவதையும் மாணவர்கள் சத்தியப்பிரமாணம் செய்வதையும் படங்களில் காணலாம்.




                                                              அதிபர் 

No comments:

Post a Comment