Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, August 13, 2015

தேர்தல் பிரசாரத்திற்காக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட பொருட்களை கைப்பற்றிய சீதுவை பொலிஸார். தேரர்களின் சீருடையும் மீட்பு

தேர்தல் சட்டவிதிகளை மீறி  தேர்தல் பிரசார நடவடிக்ககைகளுக்காக  வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை போஸ்டர்கள், கட்டவுட்.பௌத்த தேரர்கள் அணியும் ஆடை, அச்சிடப்பட்ட தொப்பிகள், ரீ சேர்ட், தண்ணீர் போத்ல்கள் ஆகியவற்றை சீதுவை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (13) கைப்பற்றியுள்ளனர்.
சீதுவை ரயில் குறுக்கு வீதியொன்றில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மேற்படி பிரசாரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட தேர்தல் பிரசாரப் பொருட்கள் பொது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் களனி தேர்தல் தொகுதி அமைப்பாளரும் வேட்பாளருமான பிரசன்ன ரணவீரவிற்கு சொந்தமானது எனத் தெரிய வருகிறது.   கைப்பற்றப்பட்ட பொருட்களில் பிரசன்ன ரணவீரவின்  படம்  மற்றும் விருப்பு இலக்கம் அச்சிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.




தேர்தல் சட்டவிதிகளை மீறி   பிரசார நடவடிக்ககைகளுக்காக  கொண்டு செல்லப்பட்ட பிரசுரங்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 
சீதுவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி        பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.யு.டப்ளியு.எல். விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர்  சோதனை  நடவடிக்கையை மேற்கொண்டு  மேற்படி பிரசாரப் பொருட்களையம் வாகனத்தையும்  கைப்பற்றியுள்ளனர்.








No comments:

Post a Comment