. இலங்கையில் அஹ்மதிய்யா முஸ்லிம்
ஜமாஅத் ஸ்தாபிக்கபட்டு இந்த ஆண்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாவதையொட்டி இலங்கை அஹ்மதிய்யா முஸ்லிம்
ஜமாஅத்தின் வாலிபர் சம்மேளனம் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (09.08.2015)
நீர்கொழும்பு பெரியமுல்லை ஜூம்ஆ மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள அஹ்மதிய்யா ஜுபிளி
மண்டபத்தில்;
இடம்பெற்றது.
மத்திய
இரத்த வங்கியின் தேசிய இரத்த மாற்று சேவையுடன் இணைந்து இந்த இரத்ததான நிகழ்வு
ஏற்பாடு செய்யப்படடிருந்தது. அஹ்மதி ஆண்கள், பெண்கள் பலர் இந்த இரத்ததான நிகழ்வில்
பங்கு கொண்டு இரத்ததானம் செய்தனர்.
காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரையில் இரத்ததான
நிகழ்வு இடம்பெற்றது.
No comments:
Post a Comment