Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, February 29, 2016

நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் நீர்கொழும்புக் கிளையின் முதலாவது பொதுக்கூட்டம்

 நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் நீர்கொழும்புக் கிளையின் முதலாவது பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28-2-2016); நீர்கொழும்பு zaiba garden  மண்டபத்தில் நீர்கொழும்பு கிளைத்  தலைவர்  லாபிர்  தலைமையில் நடைபெற்றது.
இதன் போது நீர்கொழும்பு பெரியமுல்லை வாலிபர்களுக்கு தத்தமது பிரதேசங்களின் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன
2016 ஜனவரி மாதம் இச்சங்கம் ஆரம்பமானது. இச்சங்கத்தின்  தலைமைக் காரியாலயம்  சவுதியில் அமைந்துள்ளது.  சவுதியில் வாழும் பெரியமுல்லையை சேர்ந்த வாலிபர்கள் முன்னெடுத்த முயற்சியாலேயே இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது போன்று கட்டார்,
குவைத் ஆகிய  நாடுகளில் வசிக்கும் பெரியமுல்லை முஸ்லிம் வாலிபர்களால் கிளைக் காரியங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக இச்சங்கத்தின் தலைவர் ஜியாஸ் தெரிவித்தார். இச்சங்கத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் பெரியமுல்லை பகுதியில் முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்  மேலும் தெரிவித்தார்.









2 comments: