கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடங்காவல் பிரதேசத்தில்
மண் அகழ்ந்தெடுப்பதற்காக தோண்டப்பட்ட பாரிய குழிகளை உடனடியாக மூடுமாறு கோரி பிரதேசவாசிகள் இன்று திங்கட்கிழமை (10) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த
மாதம் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தோப்பு ரோமன்
கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் எட்டில் பயிலும் மாணவர்கள் இருவர் உடங்காவல்
பிரதேசத்தில் தோண்டப்பட்டிருந்த பத்து ஏக்கர் பரப்புடைய நீர் நிறைந்த குழியில் நீராடச்
சென்ற போது நீரில் மூழ்கி பரிதாபகரமாக மரணத்தை தழுவினர்.
இதனை
அடுத்து உடங்காவல் பிரதேசத்தில் கொந்தராத்துக்காரர்களால்
மண் அகழ்வதற்காக தோண்டப்பட்டிருக்கும் குழிகளை உடனடியாக மூட வேண்டும் என்று பிரதேச
மக்கள் அதிகாரிகளை வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கிணற்றுத் தண்ணீரை எங்கே தேடுவது? குழியிலா? கிணற்றிலா?,
குழிகளை தோண்டுவதறகு அனுமதித்தது யார்?, இனியும் இங்கே சிறுவர் பலி வேண்டாம், மணல்
கல்லறைகளை நிரப்பு, அகழியை உடனே நிரப்பு, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்ததோடு எதிர்ப்புக் கோசங்களையும் எழுப்பினர்.
புpன்னர்
ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டவர்கள் உடங்காவை பிரதேசத்திலிருந்து பேரணியாகச் சென்று நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் கொச்சிக்கடை மகா ஓயா பாலம் அருகில் வந்து வீதியை
மறித்து கோசங்களை எழுப்பினர். இதன் காரணமாக
வீதிப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டது.
சம்பவ
இடத்திற்கு கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக
ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பிரதேசவாசிகள் கூறியதாவது,
மாணவர்கள்
இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த பத்து ஏக்கர்
பரப்பளவு கொண்ட பாரிய குழி 2004 ஆம் ஆண்டு
முதல் 2015 ஆம் ஆண்டு வரை தோண்டப்பட்டதாகும். தோண்டப்படும் குழிகள் பின்னர் மூடப்பட
வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கு அதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது.
ஆயினும், அந்தக் குழிகள் மூடப்படாததன் காரணமாக நீர் நிறைந்த பாரிய குழிகள் பிரதேசத்தில்
உள்ளன. இந்த குழிகள் 20 முதல் 100 அடிக்கு மேற்பட்ட ஆழமுடையதாகும். நீர் நிறைந்த குழிகளில்
விழுந்து இதற்கு முன்னர் மூவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிரதேசத்தின் சூழல் மாசடைவதற்கும் இந்தக் குழிகள் காரணமாக அமைந்துள்ளன. எனவே இந்தப்
பரிச்சினைக்கு உடனயொக தீர்;வு கிடைக்க வேண்டும் என்றனர்
No comments:
Post a Comment