நீர்கொழும்பு,
போருதொட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள கம்மல்தொட்ட
மீன் விற்பனைச் சந்தை கடற்கரைப் பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக மலைப் போல் குவிந்து
கிடக்கும் குப்பைகளை அகற்றப்படாமல் இருப்பது தொடர்பாக மீனவர்கள் மற்றும் சந்தைக்கு
வரும் பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இது
தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
கடந்த
வருடம் மே மாதம் கடுமையாக பெய்த மழையை அடுத்து
ஏற்பட்ட வெள்ளத்தின்போது நீர்கொழும்பு களப்பு மற்றும் மா ஓயா ஆற்றிலிருந்து
கடலுக்குள்
அடித்து வரப்பட்ட மீன்பிடி வளைகள் , மற்றும் பல்வேறு வகையான குப்பைகள் கடலில் பரவி காணப்பட்டது. மீன் பிடிப்படகுகளின் கீழ் சிக்குண்டிருந்த
இந்த கழிவுகளினால் படகு கவிழ்ந்து இரண்டு மீனவர்கள்
பரிதாபகரமான முறையில் இறந்தனர்.
இதனை
அடுத்து எமது மீனவர் சங்கத்தின் மூலமாக இரண்டு
இலட்சம் ரூபா பணத்தைச் செலவிட்டு பெக்கோ இயந்திரங்களைப்
பயன்படுத்தி கடலில் தேங்கி நின்ற குப்பைகளை
அகற்றி கரைக்கு கொண்டு வந்த சேர்த்தோம். ஆயினும் இந்த கழிவுகளை கரையிலிருந்து
அகற்றிச் செல்லுமாறு நீர்கொழும்பு மாநகர சபை, நீர்கொழும்பு கடற்றொழில் காரியாலயம் மற்றும்
கரையோர பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு பல முறை அறிவித்தோம், அதிகாரிகள் இதனை பார்வையிட்டுச் சென்றபோதும் இது
வரை குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. கடற்கரையோரம் பல மீற்றர் தூரத்திற்க குப்பைகள் மலைப்போல் குவிந்து உள்ளன. இதன் காரணமாக சுற்றாடல் மாசடைவதுடன் பல்வேறு நோய்கள்
எற்படுகின்றன. கடற்கரையின் அழகுத் தோற்றமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள்
இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment