Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, May 29, 2020

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அன்பளிப்பு


நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு தனியார் நிறுவனம் ஒன்றினால் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு வார்ட் ஒன்று நிர்மாணித்து அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் எட்டு மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் ஏழாவது மாடியில் பத்து கட்டில்களுடன் இந்த தீவிர சிகிச்சைப் பிரிவு  அமைக்கப்பட்டுள்ளது.
புதிய தீவிர சிகிச்சைப் பிரிவு வார்ட்டை (Ward) பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை  (29) மாலை இடம்பெற்றது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா, கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாந்து புள்ளே, வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டின் பெயர் படிகத்தை திரை நீக்கம் செய்து வைத்தார்.







No comments:

Post a Comment